Monday 13 June 2016

ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி

             
  ஓம் எனும் பொருளாய் உள்ளோய்  போற்றி
     ஒம் பூமனம் பொருள்  தொறும் பொலிவாய் போற்றி
              ஓம்  அகரம்  முதலென  ஆனாய் போற்றி
    ஓம் அகர உகர ஆதி  போற்றி
                ஓம்   மகரமாய் நின்ற  வானவ போற்றி
     ஓம் பகர் முன்னவனாம் பரனே  போற்றி                              6

             ஓம் மண்ணாய்  விண்ணாய் மலர்ந்தாய் போற்றி
      ஓம்  கண்ணுள்  மணியாய்  கலந்தாய் போற்றி
              ஓம்  நீர்தீக்  காற்றாய் நின்றாய்  போற்றி
       ஓம்   கார்குளிராக  கனிந்தாய் போற்றி
              ஓம் பகலவன்  நிலவாய்  பரந்தாய்  போற்றி
       ஓம்  நிகர்மீன்  கணமாய் நிலைத்தாய்   போற்றி                12

               ஓம் மழைபொழி  இமய வல்லிசேய்  போற்றி
      ஓம்  தழைசெவி  எண்தோள்  தலைவ  போற்றி
               ஓம் திங்கட்  சடையோன்  செல்வ   போற்றி
     ஓம் எங்களுக்கு  அருளும்  இறைவா  போற்றி
               ஓம் ஆறுமுகச்  செவ்வேட்க்கு  அண்ணா  போற்றி
      ஓம் சிறுகண்  களிற்றுத் திருமுக  போற்றி                             18

               ஓம்  செம்பொன்  மேனிச்  செம்மால்   போற்றி
    ஓம்  உம்பர்  போற்றும் உம்பல்  போற்றி
               ஓம் பண்ணியம்  ஏந்துகைப்  பண்ணவ  போற்றி
    ஓம்  எண்ணிய  எண்ணியாங்கு  இசைப்பாய்  போற்றி
              ஓம் அப்பமும்  அவலும்  கப்புவாய்  போற்றி
    ஓம் முப்புரி  நூல்மார்பு  அப்பா போற்றி                                       24

             ஓம்  எள்ளுருண்டை  பொறி ஏற்பாய்  போற்றி
     ஓம் தெள்ளறு  தெவிட்டாத்   தேனே  போற்றி
             ஓம்  மூவர்  மொழியிடம்  மொழிந்தாய்  போற்றி
      ஓம் தேவர்க்கு  அரிய தேவா போற்றி
              ஓம்  மாலுக்கு  அருளிய  மதகரி  போற்றி
      ஓம் பாலெனக்  கடல்நீர்  பருகினாய்  போற்றி                         30

              ஓம்  பாரதம் எழுதிய  பருஉக்கர  போற்றி
       ஓம் மா ரதம்  அச்சொடி  மதவலி  போற்றி
              ஓம் மாங்கனி  அரன்பால்  வாங்கினோய்  போற்றி
       ஓம் ஈங்கினி  எம்பால்  எழுந்தருள்  போற்றி
               ஓம்  கரும்பு  ஆயிரம்கொள்  கள்வா  போற்றி
        ஓம் அரும்பொருளே  எம்  ஐயா போற்றி                                   36
       
                ஓம்  திணைபால்  கடந்த  தேவே  போற்றி
       ஓம்  புணையாய்  இடர்க்கடல்  போக்குவாய்  போற்றி
               ஓம் பேழை  வயிற்றுப்  பெம்மான்  போற்றி
       ஓம்  ஏழைக்கு  இரங்கும்  எம் இறை  போற்றி
              ஓம்  அடியவர்  உள்ளம்  அமர்ந்தாய் போற்றி
       ஓம்  அடிமலர்  எம்தலை  அணிவாய் போற்றி                         42
     
             ஓம்  திருநீற்று  ஒளிசேர்  செம்மால் போற்றி
      ஓம்   இரு வேறு  உருவ  ஈசா  போற்றி
               ஓம்  உள்ளத்து  இருளை  ஒழிப்பாய்  போற்றி
      ஓம்  கள்ளப்  புலனைக்  கரைப்பாய்  போற்றி
               ஓம்  நம்பியாண்டார்க்கு  அருள்  நல்லாய்  போற்றி
     ஓம்  எம்பிரானாக  இனிதே  இசைந்தாய்  போற்றி                                        48

              ஓம்  உருகுவோர்  உள்ளத்து  ஒளியே  போற்றி
    ஓம்  பெருகு  அருள்  சுரக்கும்  பெருமான்  போற்றி
              ஓம்  தம்பிக்கு  வள்ளியைத்  தந்தாய்  போற்றி
   ஓம்   உம்பர்கட்கு  அரசே  ஒருவ  போற்றி
              ஓம்   பிள்ளையார்ப்  பெயர்கொண்டு  உள்ளாய்  போற்றி
    ஓம்  வள்ளலாய்  நலன்கள்  வழங்குவாய் போற்றி                       54

             ஓம் மூவாச் சாவா  முத்தா போற்றி
    ஓம்  ஆவா  எங்களுக்கு  அருள்வாய்  போற்றி
            ஓம் தமிழ்ச்சுவை  சார்திருச் செவியோய்  போற்றி
    ஓம் அமிழ்தாய்  எம்மகத்து  ஆனாய்  போற்றி
           ஓம்  மழவிளங்களிரே  மணியே  போற்றி
    ஓம்   குழவியாய்  சிவன்மடி  குலவுவோய்   போற்றி                    60

           ஓம் பெருச்சாளியூரும்  பிரானே போற்றி
    ஓம்  நரிச் செயலார்பால்  நண்ணாய்  போற்றி
           ஓம்  செந்தாமரைத்  தாள்  தேவா  போற்றி
    ஓம் நந்தா மணியே நாயக  போற்றி
            ஓம் இருள்சேர்  இருவினை  எறிவாய் போற்றி
    ஓம்  கரிமுகத்து  எந்தாய் காப்போய்  போற்றி                                 66

           ஓம்  ஆங்காரம்முளை  அறுப்பாய்  போற்றி
   ஓம்  பாங்கார்  இன்பப்  பராபர  போற்றி
           ஒம் கற்றவர் விழுங்கும்  கனியே  போற்றி
    ஓம்   மற்றவர் காணா  மலையே  போற்றி
           ஓம்  சொல்லொடு  பொருளின்  தொடர்பே  போற்றி
    ஓம்  கல்லும்  கரைக்க  வல்லோய்  போற்றி                                  72

           ஓம் தொந்தி வயிற்றுத் தந்தி போற்றி
   ஒம் முந்திய பொருட்கும்  முந்தியோய்  போற்றி
          ஓம் ஐந்து கை உடைய  ஐய  போற்றி
  ஓம்  ஐந்தொழில்  ஆற்றும்  அமர  போற்றி
          ஓம் அருளாய்  அருள்வாய்  ஆண்டவ  போற்றி
  ஓம்  தருவாய்  மணமலர்த் தாராய்  போற்றி                                 78

         ஓம்  கயமுக அசுரனைக் காய்ந்தாய்  போற்றி
 ஓம்  மயலரும்  இன்ப  வாழ்வே  போற்றி
         ஓம்  ஆனையாய்  புழுவாய்  ஆனாய்  போற்றி
 ஒம் பானை  வயிறறுப் பரமே  போற்றி
         ஓம்  கடம்பொழி  யானைக் கன்றே  போற்றி
 ஓம்  மடம்ஒழி  அறிவின் வளனே போற்றி                                      84

         ஓம் பாலொடு  தேனும்  பருகுவோய் போற்றி
 ஓம்  மேலோட கீழாய்  மிளிர்வோய்  போற்றி
         ஓம்  எய்ப்பில் வைப்பாய்  இருந்தோய்  போற்றி
 ஓம் மெய்ப்பொருள் வேழ  முகத்தான்  போற்றி
         ஓம்  நல்லார்க்கு  எட்டும்  நாதா  போற்றி
  ஓம்  பொல்லா  மணியே  புராதன  போற்றி                                     90

         ஓம்  அறிவின்  வரம்பில்  அகன்றாய்  போற்றி
  ஓம் குறிகுணம்  கடந்த குன்றே  போற்றி
          ஓம்  எட்டு வான்குணத்து எந்தாய் போற்றி
  ஓம்  கட்டறு  களிற்று  முகத்தோய்  போற்றி
          ஓம்  மலரில்  மணமாய்  வளர்ந்தாய்  போற்றி
  ஓம்  அலர் கதிர் ஒளியில்  அமர்வோய்  போற்றி                           96

           ஓம் ஓங்காரம்  முகத்து  ஒருத்தல்  போற்றி
  ஓம்  ஏங்காது  உயிர்க்கு  அருள் இயற்கை போற்றி
          ஓம் எண்ணும் எழுத்துமாய்  இசைந்தாய்  போற்றி
  ஓம்  பண்ணும்  பயனுமாய்  பரந்தாய்  போற்றி
         ஓம் அருவே  உருவே  அருஉரு  போற்றி
  ஓம்  பொருளே  பொருளின்  புணர்ப்பே  போற்றி                             102

          ஓம் புகர்முகக்  களிற்றுப்  புண்ணிய  போற்றி
 ஓம்  அகலிடம்  நிறைய  அமர்ந்தோய்  போற்றி
          ஓம்  செல்வம் அருள்க  தேவா போற்றி 
 ஓம்  நல்லன  எமக்கருள்  நாயக  போற்றி
         ஓம் ஆக்கமும்  ஊக்கமும்  அருள்வாய்  போற்றி
 ஓம்  காக்க எங்களை  உன்  கழலினைப்   போற்றியே  ....               108

விநாயகர் சரண மாலை

விநாயகர் சரண மாலை

அருளே சரணம்! அன்பே சரணம்!
அன்னை மீனாள் மகனே சரணம்!
இருளைப் போக்கி ஒளியைச் சேர்க்கும்
ஈசன் மகனே சரணம்! சரணம்!
உருகிப் பணியும் அடியார் மனதில்
ஒளிரும் ஞானச் சுடரே சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!


திருவே சரணம்! தெளிவே சரணம்!
திகழும் யோக வடிவே சரணம்!
கருவாய் விளங்கிக் கவிஞர் மனதில்
கவியாய்ச் சுரக்கும் தமிழே சரணம்!
அருவம் உருவம் இவைகள் கடந்த
அருளே உயிரே சரணம்! சரணம்!
அருகப் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!


அழகன் மருகன் முருகன் போற்றும்
ஆனை முகனே சரணம்! சரணம்!
கழல்கள் அதிரக் களித்தே ஆடும்
காளித் தாயின் சுதனே சரணம்!
திருவாம் ஈசன் பாதம் பணியும்
தெய்வக் களிறே சரணம்! சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!


உழலும் மனிதர் நலமாய் வாழ
உன்னத அருளைத் தருவாய் சரணம்!
மழையைப் போல கருணைப் பொழிந்து
மங்களம் அருள்வாய் சரணம்! சரணம்!
தருவாய் உந்தன் அருளை என்றுன்
தாள்கள் பணிந்தேன் சரணம்! சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!


ஊழின் வினையும் உலகத் துயரும்
ஒருங்கே ஒழிய அருள்வாய் சரணம்!
வாழி என்றுன் பதங்கள் பணிந்தோம்!
வந்தே நலங்கள் தருவாய் சரணம்!
தருமி போலத் திரியும் எனக்கும்
தமிழைத் தருவாய் சரணம்! சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம் சரணம்!


மலரே! மணமே! மனதுள் அருளே!
மலையே! மடுவே! மகிமை ஒளியே!
அலையே! கடலே! அடங்காப் புயலே!
அன்பில் தாயே! அருமைச் சேயே!
நிலையாய் விளங்கும் நீதிக் கனலே!
நெகிழும் பக்தர் விழியின் நீரே!
அருகம் புல்லைச் சூடி மகிழும்

அன்பே அருளே சரணம்! சரணம்!  



    சித்தி விநாயகர் பதிகம் - (count: 1)

    • உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
    • இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
    • திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
    • விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
    • கணேசத் தனித் திருமாலை - (count: 1)

      • உலகம் பரவும் பொருள்என் கோஎன் உறவென்கோ
      • கலகம் பெறும்ஐம் புலன்வென் றுயரும் கதிஎன்கோ
      • திலகம் பெறுநெய் எனநின் றிலகும் சிவம்என்கோ
      • இலகைங் கரஅம் பரநின் தனைஎன் என்கேனே.